செவ்வாய், 22 செப்டம்பர், 2015

           சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு..



                                    எந்த உலக நாட்டு இளைஞர்களுக்கும் இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் துரதிருஷ்டம் நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.
யாரைப் பிடித்தாவது, யார் காலில் விழுந்தாவது வேலை வாங்கி விட வேண்டும். அது அரசுத் துறையாகவும் இருக்காலம். அல்லது தனியார் துறையாகவும் இருக்கலாம். ஆனால் வேலை பார்த்து மாதச் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.
சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் மிகக் குறைவு. சுய தொழில் தொடங்க, இளைஞர்களை ஊக்குவிக்க அரசும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) அளித்து வருகிறது.
மத்திய அரசின் விதிகளின்படி 8-ம் வகுப்பு தேறியவர்கள் முதல், இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும்.
இந்தப் பணியில் மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. முக்கிய பங்காற்றி வருகிறது. சுய தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதுதவிர கோவை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட சில நகரங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன பயிற்சிகள்?

                                                        டர்னர், மில்லர், பிட்டர், சிஎன்சி ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், தயாரித்தல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், நவ ரத்தினக் கற்கள் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரித்தல், இயந்திரவியல், பொறியியல், மின்சாரம், மின்னணுத் துறை, தோல், பீங்கான் மற்றும் கண்ணாடி, ரசாயணம் உள்ளிட்ட துறைகளில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பொருத்தமான சுய தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழிலை பதிவு செய்வது எப்படி, உரிமம் எங்கு பெறவேண்டும், கடன் பெற என்னென்ன வழிகள் உள்ளன, தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது, தொழில் கூடங்களை நவீனமயமாக்குவது எப்படி என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இலவசமாக இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பெட்டிக்கடை ஆரம்பிக்க விரும்புபவர்களிலிருந்து  உற்பத்தித் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் வரை இந்த நிறுவனத்தை அனுகலாம்.

நூலகம்

          எம்.எஸ்.எம்.இ. மையங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு உதவியாக 800-க்கும் மேற்பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை, தொழில் தொடங்க முனைவோர் பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு ஒரு முறை தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, மாவட்ட வாரியாக தயாரித்து வைக்கப்படுகிறது.

வங்கிகளுடன் கூட்டு

                                              சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறும் வகையில், எம்.எஸ்.எம்.இ. நிறுவனம், இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. வங்கிகள், கடன் கோரும்  நபரின் தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப கடன்களை வழங்குகின்றன.

புதிய திட்டங்கள்

                                        சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு, மூலதனத்தில் மானியம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் பிரதமரின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி ரூ. 25 லட்சம் வரையிலான திட்ட மதிப்புடைய உற்பத்தித் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மூலதனத்தில் 15 முதல் 35 சதவீதம் வரை அந்தந்த தொழிலுக்கு ஏற்றபடி மானியம் வழங்கப்படும். இதுபோல் ரூ. 10 லட்சம் வரை திட்ட மதிப்புடைய சேவை நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கும் மூலதனத் தொகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே, வேலை கிடைக்கவில்லை என்று ஏங்காமல், சுயதொழில் துவங்கி மற்றவர்களுக்கு வேலை தரும் ஆதாரமாக மாறுங்கள் இளைஞர்களே...https://www.facebook.com/SPACE-195178687352522
ஊத்துக்கோட்டை அருகே சென்னைக்கு குடிநீர் வழங்க 1100 ஏக்கரில் புதிய ஏரி: டிசம்பரில் தண்ணீரை தேக்க ஏற்பாடு

 பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 21

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகள் அனைத்தும் மழை நீரை நம்பிதான் உள்ளது. பூண்டி ஏரிக்கு மட்டும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வருவது வழக்கம்.
இதே போல் வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையின் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆறு மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
மழை பொய்ந்து விடும் போது கோடை காலங்களில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டையில் உள்ள ஏரிகளை ஒன்று சேர்த்து ரூ.330 கோடி செலவில் மிக பிரம்மாண்ட நீர் தேக்கம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தார்.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை பகுதிகள் இயற்கையாகவே ஆழமான பகுதிகளாக உள்ளன. மேற்கூறப்பட்ட 2 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு ஆந்திர மாநிலம் சத்தியவேடு காட்டு பகுதிகளில் உள்ள மதனம்பேடு, பாலகிருஷ்ணாபுரம், மதனஞ்சேரி, ராஜகுண்டா ஆகிய ஓடைகள் மூலம் வருடத்துக்கு 0.3 டிஎம்சி மழை நீர் வருகிறது. ஆனால் மேற்கூறப்பட்ட 2 ஏரிகளில் 41 மில்லியன் கனஅடி நீர் மட்டும் சேமித்து வைக்க முடியும். மீதமுள்ள தண்ணீர் வங்க கடலில் வீணாக போய் சேருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த பகுதியை நீர் தேக்கம் அமைக்க தேர்ந்தெடுத்தது.
நீர் தேக்கம் அமைக்க, கிருஷ்ணா நதி நீரை கண்ணன் கோட்டை நீர் தேக்கத்துக்கு கொண்டு செல்ல கால்வாய் அமைக்க 1485 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில் 800 ஏக்கர் பட்டா நிலம். 630 ஏக்கர் புறம்போக்கு நிலம். 55 ஏக்கர் வனத்துறைக்கு சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. பட்டா நிலம் உரிமையாளர்களுக்கு ஏக்கர் 1க்கு ரூ. 13 லட்சம் விதம் 477 பேருக்கு அரசு பணம் பட்டுவாடா செய்துள்ளது. மீதம் உள்ள 250 பேர் பணம் வாங்க மறுப்பதால் பணத்தை பொன்னேரி கோர்ட்டில் அரசு செலுத்தி உள்ளது. கண்ணன் கோட்டை– தேர்வாய் ஏரிகளை ஒன்றிணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. நீர் தேக்கம் மட்டும் 1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. 385 ஏக்கர் நிலப்பரப்பில் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 14 மீட்டர் உயரத்தில் 11½ கிலோ மீட்டர் சுற்றளவில் நீர் தேக்கம் அமைக்கப்படுகிறது. 1 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் விதத்தில் நீர் தேக்கம் கட்டப்படுகிறது.
அதாவது 1000 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளியில் கால்வாயின் குருக்கே தடுப்பு அமைத்து அங்கிருந்து கண்ணன் கோட்டை நீர் தேக்கத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல உள்ளனர்.
சத்தியவேடு காட்டு பகுதியில் உள்ள ஓடைகளின் நீரும், கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும். இதற்காக ஜங்காலபள்ளியிலிருந்து கண்ணன்கோட்டை நீர் தேக்கம் வரை 8.30 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.
கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமிக்கும் தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் 13 கிலோ மீட்டர் தூரத்தில் ஊத்துக்கோட்டை அம்பேத்கார்நகர் பகுதியில் கிருஷ்ணா கால்வாய்க்கு அனுப்பி, அங்கிருந்து தண்ணீர் பூண்டி வந்து சென்னைக்கு அனுப்பப்படும். இதற்காக கண்ணன் கோட்டை நீர் தேக்கத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் ரூ. 100 கோடி செலவில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க உள்ளனர்.
நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், டிசம்பரில் தண்ணீர் சேமிக்கப்படும் என்றும் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.https://www.facebook.com/SPACE-195178687352522

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

BUSH BETTA FOOD - 20gm - 35rs
FEATURES:
Bush Fish Food are floating pellets that will cloud water.Bush Fish Food are manufactured by automation from select ingredient under strict quality Control.
FEEDING
Feed Bush Fish Food two or three times daily according to suitable water temperature.Fish will consume within five to ten minutes.
INGREDIENTS
Fish meal,Wheat meal,Yeast,Germ meal, Vegetables,Spirulina,Shrimp meal vitamins and Mineral Suppliements,etc..........!